தமிழ் வயல் எனும் வலைப்பூ மூலம் வண்ணத்தமிழில் என் எண்ணங்களை ஏந்தி வருகிறேன்.உலகம் முழுதும் விரவியுள்ள தமிழ்த் தோழர்களை சென்றடையும் பெரு விருப்பில் இணையதளத்தினுள் முதலடி வைக்கிறேன்."யாதும் ஊரே;யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங்குன்றனின் வைர வரிகளை வழ்வியல் தத்துவமாய்க்கொள்வோம்;சாதி,மதம் கடப்போம்;அன்பை நாளும் விதைப்போம்;மனித நேயம் வளர்ப்போம்.இத்துடன் இன்று விடைபெறுகிறேன்,தற்காலிகமாய்-வாழ்த்துக்களையும் வசைகளையும் எதிர்பார்த்து.