- துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள்.
- நாம் பிறரிடம் உரையாடும் பொழுது, அதை அவர்கள் விருப்புடன் கவனிக்கிறார்களா என்பதைத் தெரிந்து நமது உரையைத் தொடர்தல் நல்லது.
- நடக்க, நடக்கத்தான் பாதை உருவாகும். முயற்சி செய்ய, செய்ய வாழ்க்கை கைகூடும்.
- நெடுநாள் கழித்து இளமைக்கால நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.
- வாழ்க்கையை பாலைவனமாக்குவதும் பசுஞ்சோலையாக்குவதும் நம் எண்ணங்களே. நல்ல எண்ணங்கள் மெதுவாகவேனும் நம்மை உயர்வு நோக்கி உந்திச் செல்லும்.
- உதவாக்கரை என்று ஒருவரை ஒதுக்கி , ஓரங்கட்டி விடாதீர்கள் . பிறவியில் அப்படி யாரும் இல்லை . சூழ்நிலை காரணமாக ஒருவருக்குள் இருக்கும் திறமைகள் வெளிப்படாமல் இருக்கலாம் . சூழ்நிலை கனியும் பொழுது , அவருக்குள் இருந்தும் ஒரு அற்புதமான ஆற்றலாளன் வெளிவரக்கூடும் .
- எளிமை என்பது ஒரு விலைமதிப்பற்ற ஆபரணம். அதை அணிந்ததனால் தான் காந்தி, காமராசர் போன்றோர் உலகெங்கும் அறியப்படுகின்றனர்.
- அலமாரியில் உள்ள புத்தகங்களைத் தொட்டு, எடுத்து, தூய்மைப்படுத்தி, நல்ல முறையில் ஒழுங்காக அடுக்கி வைக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி மலரும். புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு விசாலமடையும்.
- இயற்கையை அழிப்பதால் ஏற்படும் இழப்புக்கள் பெரிய அளவில் நம்மைப் பாதிக்காமல் இருக்கலாம். ஆனால் வருங்காலத் தலைமுறையினர் மழையையே பார்க்காத அவலத்தைச் சந்திக்கப் போகிறார்கள் என்பது மட்டும் மகா சத்தியம்.
- அதிகார போதை அபாயகரமானது . அதை உங்களுக்குள்ளே அனுமதிக்காதீர்கள் . உங்களை அது படுகுழியில் தள்ளிவிடும் . அன்பு ஒன்றே நிலையானது . அன்பு காட்டுங்கள் . மனம் லேசாகும் . வாழ்க்கை சுகமாகும் .
செவ்வாய், 16 ஜூலை, 2013
சிந்தனை பத்து - 18
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)