சனி, 16 அக்டோபர், 2004

விழுதலும் கூட விழுமியதே!

எழுதலைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள்.
அதிகாலையில் துயிலெழு என்கிறது அறிவு நூல்.
"விழி;எழு" என்கிறார் விவேகானந்தர்.
"எழுந்து நில்;துணிந்து செல்" என்கிறது திரைப்படப் பாடல்.
எழுதல் மட்டுமா சிறப்பு?
விழுதலும் கூட விழுமியதே!
விசும்பிலிருந்து துளி விழுவதால் தான் ஆறு,ஏரி,குளமெல்லாம் நீர் நிரம்பி வழிகிறது.
மலையிலிருந்து நீர் விழுவதால் தான் மின்சாரம் உதயமாகிறது.
மண்ணில் விதையொன்று விழுவதால் தானே,விண்ணுக்குள் மரமொன்று உயர்கிறது!
விழும்பொழுது தான் மனிதன் எழுவதற்கு எத்தனிக்கிறான்.
காலில் விழுவது வேண்டுமானால் காறி உமிழத்தக்க செயலாய் இருக்கலாம்.
மானுடம் சிறப்புற பயனேதும் கிட்டுமாயின்,விழுவதும் தொழுது ஏற்கத் தக்கதே.

கருத்துகள் இல்லை: