சனி, 23 பிப்ரவரி, 2008

காலம் இது கலி காலம்.

காலம்
இது கலி காலம்.
காந்திகளுக்கு
கோட்சேக்கள
அகிம்சை
போதிக்கிறார்கள்

ஆந்தைகள்
குயில்களுக்கு
இசை பாட
கற்றுத் தருகின்றன.

எருக்கம் பூக்கள்
மல்லிகைக்கு
மணம் பற்றி
உபதேசிக்கின்றன

வேப்பங்காய்கள்
அணி வகுத்து
பலாச் சுளைகளுக்கும்
மாம்பழக் கீற்றுகளுக்கும்
இனிப்பது
எப்படியென்று
இலக்கணம்
இயம்புகின்றன.

இதே ரீதியில்
காலம் போனால்.....
பொய்களிடம்
உண்மைகள்
கை கட்டி நிற்கும்

மின்மினிகளிடம்
விண் மீன்கள்
வெளிச்சத்துக்காய்
தவங் கிடக்கும்.

ஹிட்லர்களும்
இடி அமீன்களும்
தலைமை தாங்கும்
மனித நேயக்
கருத்தரங்குகளில்
ஏசு பிரான்களும்
புத்தர்களும்
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
வாசிப்பர்

சாக்கடைகளிடம்
சேர்ந்து
கங்கையும்
காவிரியும்
சுத்தம் பற்றி
விவாதிக்கக் கூடும்.

கொக்குகள்
மீன்களுக்கு
நீச்சல்
கற்றுத் தர
முன் வரலாம்.

ஏக பத்தினி விரதம்
பற்றி
ராமர்களுக்கு
அர்ச்சுனர்கள்
அறிவுரை
வழங்கக் கூடும்.

ஆதலால்
தோழர்களே,
எதற்கும்
ஆயத்தமாயிருங்கள்.....
காலம்...
இது கலி காலம்!

8 கருத்துகள்:

Jjkk சொன்னது…

thala!!! romba nalla iruku.... unga perum en perum onnudhan nenachu naan peruma padrean.... ungaL vayalil meya indha aadu kaathukondirukiradhu......

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வினவு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Kannan சொன்னது…

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.