சனி, 18 பிப்ரவரி, 2012

பெண்

கல்யாணத்திற்கு முன்
தினந்தோறும்
இரண்டுமுறை குளித்து
பல தடவை முகங்கழுவி
பொருத்தமாய் பொட்டிட்டு
கண்ணுக்கு மையப்பி
மணிக்கணக்காய் ஆராய்ந்து
ஆடை தேர்ந்து
உடுத்திப் பார்த்து
பிடிக்காமல் போய்
மீண்டும் மாற்றி
கோதிய தலையில்
கொத்துப் பூச்சூடி
மருதாணிச் சாயத்தை
நகம் கை பூசி
தன்னை அழகாக்கிக் கொள்வாள்.
கல்யாணத்திற்குப் பின்
அரைத் தூக்கத்தில்
அதிகாலை துயிலெழுந்து
வாசல் பெருக்கி
வண்ணக் கோலமிட்டு
சமையல் பண்ணி
வீடு பெருக்கித் துடைத்து
சலவை செய்து
குளிக்கக் கூட நேரமில்லாமல்
தன்னை அழுக்காக்கிக் கொள்வாள்.

கருத்துகள் இல்லை: