வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாளை நமதே

இப்படியே போகாது காலம்
வெளிச்சம் வரும்
விடியல் மலரும்.
வாழும் நாளெல்லாம்
கோடையே கொளுத்தாது.
சோகங்கள் மட்டுமே
கொண்டதல்ல வாழ்க்கை.
சுகங்களும் தாலாட்டும்.
பாலைவனங்களிலும்
சோலைகள் உண்டு.
வீழ்ச்சியிலும்
பாடம் படிக்கலாம்.
யோசிக்கையில்
வழிகள் கிடைக்கும்.
அடி தரும் காலம்
அள்ளித் தந்து
அணைக்கவும் செய்யும்.
நம்பிக்கையோடு செயல்படு.
நல்லது நடக்கும்.
நாளை நமதே!

கருத்துகள் இல்லை: