அன்னைத் தமிழே,
உன்னை நினைத்தால்
ஆனந்தம் பாய்கிறது.
கன்னித் தமிழே,
உன்னைப் படித்தால்
கன்னலும் தோற்கிறது.
என்னில் நுழைந்து
இதயம் நிரம்பி
பொங்கி வழிகிறாய்.
நின்னை வணங்கி
நெஞ்சில் இருத்தி
பொன்னாய்ப் போற்றிடுவேன்!
உயிராய் எம்முள் நிறைந்தவளே,
உணர்வாய் குருதியில் கரைந்தவளே,
பயிராய் எம் வயல் படர்ந்தவளே,
பாகாய் மனதில் இனிப்பவளே,
கயிறாய் தமிழரை இணைப்பவளே,
கானகத் தேனாய் சுவைப்பவளே,
துயரை இசையால் துடைப்பவளே,
தொழுது உன்னைப் போற்றிடுவேன்!
உன்னை நினைத்தால்
ஆனந்தம் பாய்கிறது.
கன்னித் தமிழே,
உன்னைப் படித்தால்
கன்னலும் தோற்கிறது.
என்னில் நுழைந்து
இதயம் நிரம்பி
பொங்கி வழிகிறாய்.
நின்னை வணங்கி
நெஞ்சில் இருத்தி
பொன்னாய்ப் போற்றிடுவேன்!
உயிராய் எம்முள் நிறைந்தவளே,
உணர்வாய் குருதியில் கரைந்தவளே,
பயிராய் எம் வயல் படர்ந்தவளே,
பாகாய் மனதில் இனிப்பவளே,
கயிறாய் தமிழரை இணைப்பவளே,
கானகத் தேனாய் சுவைப்பவளே,
துயரை இசையால் துடைப்பவளே,
தொழுது உன்னைப் போற்றிடுவேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக