புதன், 31 அக்டோபர், 2012

அன்பு வெல்லும்

ஏழைக்கு
என்றென்றும்
நேசம் காட்டு.
எதிரிக்கும்
நட்புடனே
கரத்தை நீட்டு..
எவ்வுயிரும்
இன்பமுற
அன்பை மீட்டு.
'என்றுமே
அன்பு வெல்லும்'
எனும் தமிழ்பாட்டு.
வார்த்தைகளால்
யாரையுமே
 பழிக்காதே.
வசவுகளால்
இதயங்களைக்
 கிழிக்காதே.
நல்லுறவை
வன்முறையால்
 இழக்காதே.
நட்புணர்வை
இழிமொழியால்
 துளைக்காதே.
அன்பாலே
எல்லாமும் முடியும்.
ஆனந்தம்
வாழ்க்கையிலே விடியும்.
ஒரு கோடி
துயரங்கள் வடியும்.
ஓயாத
நோயெல்லாம் மடியும்.


கருத்துகள் இல்லை: