வெள்ளி, 4 அக்டோபர், 2013

எங்கே காந்தியம்?

சாதிப் புயலில்
பிய்ந்து உதிரும்
அமைதிப் பூக்கள்.

மனித நேயம்
கிழித்துக் குதறும்
மதவெறி நகங்கள்.

நீதியின் கரங்களை
வெட்டிச் சாய்க்கும்
வன்முறை வாட்கள்.

மண் எங்கிலும்
ரத்த ஆறுகள்.

தரை முச்சூடும்
தசைத் துண்டங்கள்.

எங்கு காணினும்
பயங்கர வாதம்.

தீரா நோயாய்
தீவிர வாதம்.

மேலை நாடுகள்
காந்தியின் பொருட்களை
ஏலம் போடுதாம்!
ஓ, இதென்ன அதிசயம்?
நாங்கள்
காந்தியத்தையே
ஏலம் போட்டு விட்டோம்!


கருத்துகள் இல்லை: