திருமகளை
அடைவதற்காக
கலைமகளை விற்கிறார்கள்
கல்வி வியாபாரம்.
குய்யோ முறையோ என்று
கூக்குரலிட்டாலும்
உடைந்த மண்பானை
ஒட்டிக் கொள்ளவா போகிறது?
அஸ்தமனமானாலும்
அடுத்த நாள் காலை
புத்தம் புதிதாய்
எழும் ஞாயிறு.
விழுந்தால் தான்
உதயமாகும்
எழ வேண்டும்
எனும் எண்ணம்.
சுவரெங்கிலும்
எழுதப்பட்டிருந்தது
'சுவற்றில் எழுதாதே'
நடுவே நெருப்பு
சுற்றிலும் நீர்
ஈழம்.
பூவின் மேல்
இன்னொரு பூ
வண்ணத்துப் பூச்சி.
அழுகையும் சிரிப்பும்
எழுத்துகளில்லாத
வார்த்தைகள்.
மூடிய கதவைத் திறக்கும்
திறந்த கதவை மூடும்
கொள்கை இல்லாத காற்று.
வந்ததும் போனதும்
குழந்தைக்குத் தெரியாது
அப்பாவுக்கு ஐ.டி வேலை.
அடைவதற்காக
கலைமகளை விற்கிறார்கள்
கல்வி வியாபாரம்.
குய்யோ முறையோ என்று
கூக்குரலிட்டாலும்
உடைந்த மண்பானை
ஒட்டிக் கொள்ளவா போகிறது?
அஸ்தமனமானாலும்
அடுத்த நாள் காலை
புத்தம் புதிதாய்
எழும் ஞாயிறு.
விழுந்தால் தான்
உதயமாகும்
எழ வேண்டும்
எனும் எண்ணம்.
சுவரெங்கிலும்
எழுதப்பட்டிருந்தது
'சுவற்றில் எழுதாதே'
நடுவே நெருப்பு
சுற்றிலும் நீர்
ஈழம்.
பூவின் மேல்
இன்னொரு பூ
வண்ணத்துப் பூச்சி.
அழுகையும் சிரிப்பும்
எழுத்துகளில்லாத
வார்த்தைகள்.
மூடிய கதவைத் திறக்கும்
திறந்த கதவை மூடும்
கொள்கை இல்லாத காற்று.
வந்ததும் போனதும்
குழந்தைக்குத் தெரியாது
அப்பாவுக்கு ஐ.டி வேலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக