இழப்புகள்
அழுகையால்
சரியாகாது.
ஏழ்மை
புலம்பலால்
விலகிடாது.
கவலைகள்
கதறலால்
கரைந்திடாது.
வீழ்ச்சிகள்
நோவதால்
விடைபெறாது.
இறப்பென்ன
பார்க்காத
புது நிகழ்வா?
இழப்பென்ன
நடக்காத
அதிசயமா?
வாழ்வென்ன
வற்றாத
பேராறா?
நிறுத்து
அழுகையை!
உயர்த்து
கரங்களை!
துணிவு கொள்
நெஞ்சில்!
தொடர்ந்து நட
நேர்வழியில்!
தொகை தொகையாய்
தொடரும்
துயரங்கள்
பொடிப் பொடியாய்ப்
போகும்
விரைவில்.
நம்பிக்கை தான்
வாழ்க்கை!
அது தான்
புதிய வேதம்!
உள்ளத்தில்
பதிக்க வேண்டிய
இனிய கீதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக