புதன், 6 ஜூலை, 2011

பிம்பங்கள் தெரிவதில்லை

அவளுக்கே
தெரியாது
அவளின்
அழகு.
கறுப்புக்கு
எந்தச் சிறப்பும்
இல்லையென்பது
அவளின் கணிப்பு.
ஆடைகள் ஏதுமின்றி
பனைகளுக்கடியில்
நடனமாடியபடி
ஆற்று நீருக்குள்
தன் பிம்பத்தை
பார்த்திருப்பாளாயின்
புலப்பட்டிருக்கும்
அவளுக்கு
அவளழகு.
அவளின் வீதியில்
பனைகளுமில்லை;
பாத்திரங்கழுவிய
அழுக்கு நீரில்
பிம்பங்களும்
தெரிவதில்லை.
_வாரிங் குனே

கருத்துகள் இல்லை: