வியாழன், 7 ஜூலை, 2011

இரவும் மனமும்

ஆயிரம்
கண்கள்
இரவுக்கு.
ஒன்று
மட்டுமே
பகலுக்கு.
எனினும்
சூரியன்
மறைந்ததும்
பூமியில்
மரித்துப் போகிறது
பிரகாசம்.
மனத்திற்கு
ஆயிரம்
கண்கள்.
இதயத்திற்கு
ஒன்று மட்டுமே.
எனினும்
காதல்
மறைந்ததும்
செத்துப் போகிறது
வாழ்க்கையின்
பேரொளி
ஆங்கில மூலம்: பிரான்சிஸ் வில்லியம் போர்டில்லான் !

கருத்துகள் இல்லை: