புதன், 6 ஜூலை, 2011

காலம்

காலம்......
காத்திருப்போருக்கு
மெதுவாய்
நகரும்_
நத்தைபோல.
அச்சத்தில்
அமிழ்ந்திருப்போர்க்கு
வேகமாய்
விரையும்,
வான ஊர்தியாய்.
வேதனையில்
உழல்வோர்க்கு
நீண்டு செல்லும்

சங்கப் பலகை.
மகிழ்ச்சியில்
திளைப்போர்க்கு
குறுகிச்
சிறுக்கும்,
குறளின்
அளவாய்.
காதல் வயப்பட்டோர்க்கோ,
காலம்
அழிவற்ற
முடிவிலி!

கருத்துகள் இல்லை: