வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -20


  1. சாதாரணமான மனிதர்கள் இறக்கும் பொழுது பிணமாகிறார்கள். ஆனால் புரட்சியாளர்கள் மரிக்கும் பொழுது புதிதாகப் பிறக்கிறார்கள்.
  2. ஏற்றத் தாழ்வுகளும், வர்க்க பேதங்களும், இன ஒடுக்கல்களும், சுரண்டலும் எந்தச் சமூகத்தில் எல்லை தாண்டிப் பெருகுகின்றனவோ அங்கு நிச்சயம் புரட்சி வெடிக்கும்.
  3. மாற்றங்கள் மனிதர்களிடம் தேடும் தாகத்தையும் செயல்படும் வேகத்தையும் முடுக்கிவிட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும்.
  4. வண்ணங்கள் மாறுபட்டாலும் பூக்கள் ஒன்றையொன்று வெறுப்பதில்லை.
  5. பூக்கள் வெறுமனே பூக்கள் மட்டுமல்ல. அவற்றுக்குள் காய்கள், கனிகள், விதைகள், மரங்கள் என்று எண்ணற்ற ரகசியங்கள் மறைந்துள்ளன.
  6. மகரந்தம் கொணர்ந்த வண்ணத்துப் பூச்சிக்கு தேன் தந்து நன்றி நவின்றது பூ.
  7. விதவைக்குப் பூக்கள் மறுக்கும் உலகம் அவளின் பிணத்தின் மீது பூக்களாய்க் கொட்டும்.
  8. மண்ணுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. சாதி, மதம் இல்லை.யார் தோண்டினாலும் தண்ணீர் தரும். யார் பயிரிட்டாலும் உணவு கொடுக்கும்.
  9. அடித்தாலும், உதைத்தாலும், குதித்தாலும்,சிதைத்தாலும் சினம் கொள்ளாது மண்.
  10. இயற்கைத் தேவன் தன் இன்னுயிர்க் காதலிக்கு வாரி இறைத்த வைரங்களே நட்சத்திரங்கள்.  

கருத்துகள் இல்லை: