சனி, 10 ஆகஸ்ட், 2013

பூவும் வண்ணத்துப் பூச்சியும்

தோட்டத்துச் செடியில் பூ ஒன்று அழகாகப் பூத்திருந்தது. பூவின் விரிந்த, பெரிய இதழ்கள் மஞ்சள் பூசி மங்களகரமாகக் காட்சியளித்தன. எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி. பூவைச் சுற்றி சற்று நேரம் வட்டமடித்தது. பிறகு அன்பான குரலில் பூவிடம்,"பூவே, பூவே, உன் மீது அமர்ந்து சற்று ஓய்வெடுக்கலாமா?"என வேண்டியது. "ஓ, தாராளமாக. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீ தங்கலாம். பசித்தால், என்னிடம் தேனுள்ளது. வேண்டுமளவு பருகலாம்,"என்று இனிய குரலில் மொழிந்தது பூ. தேனுண்டு இளைப்பாறிய வண்ணத்துப் பூச்சி,  பூவின் விருந்தோம்பல் பண்புக்கு நன்றி கூறி விடைபெற்றது. போகும்பொழுது, பூவின் மகரந்தத்தை தன் இறக்கையில் எடுத்துக்கொண்டுபோய் வேறொரு பூவில் சேர்த்து இன விருத்திக்கு உதவியது.   

கருத்துகள் இல்லை: