வான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலும்
வைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்
தேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்
தெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்
மீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்
மின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்
கானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்
காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!
ஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்
உருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்
ஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்
எழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்
சீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்
செங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்
கார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்
காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!
ஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்
ஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்
பாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்
பகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே
தேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே
தென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே
கூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்
காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!
வைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்
தேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்
தெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்
மீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்
மின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்
கானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்
காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!
ஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்
உருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்
ஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்
எழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்
சீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்
செங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்
கார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்
காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!
ஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்
ஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்
பாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்
பகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே
தேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே
தென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே
கூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்
காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக