சனி, 21 ஜூலை, 2012

உள்ளுக்குள்ளே

செதுக்காத வரைக்கும்
கல்லுக்குள்
சிலையிருப்பது தெரியாது.

பிழியாத வரைக்கும்
கரும்புக்குள்
சாறிருப்பது தெரியாது.

கடையாத வரைக்கும்
தயிருக்குள்
நெய்யிருப்பது தெரியாது.

எரியாத வரைக்கும்
மெழுகுக்குள்
ஒளியிருப்பது தெரியாது.

செயல்படாத வரைக்கும்
உனக்குள்
ஆற்றலிருப்பது தெரியாது.

கருத்துகள் இல்லை: