திங்கள், 11 நவம்பர், 2013

மீண்டும் குறுங் கவிதைகள்

கடலில்
நல்ல மழை
குருட்டு மேகம்.

மழைத் துளியில்
மாயா ஜாலம்
வான வில்.

எத்தனை முறை
ஐயம் கேட்டும்
கோபப்படாத ஆசிரியர்
'டியுசன்' வகுப்பு.

எமன் குறித்த நேரத்துக்கு
முன்னதாகவே மரணம்
தர்மாஸ்பத்திரி.

எல்லா வகை ரத்தமும்
ஒரே உடலில்
கொசு.

கொட்டியதும்
வளைந்தது
சட்டம்.

ஏமாற்றிய காகம்
ஏமாந்தது நரியிடம்
சந்தோசத்தில் பாட்டி.

நிஜம் வெளியே
நிழல் உள்ளே
நிலைக் கண்ணாடி.

வாலை வெட்டு
முதுகை நிமிர்த்து
மனிதன்.

ஆண்டவனுக்கும்
மாண்டவனுக்கும்
அலங்கார தேர்பவனி. 

கருத்துகள் இல்லை: