திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

ஒரு நாள்  போல்
மறு நாளில்லை.
நேற்றைய சந்தோசம்
இன்று காணோம்.
இன்றைய சோகங்கள்
நாளை மாறலாம்.
மாறாமல் போவதும்
சாத்தியமானதே.
வாய்த்த படிக்கு
வாழ்ந்து முடிப்போம்.
ஒற்றை இரவில்
உற்ற துன்பங்கள்
விலகுதல் என்பது
விளையாட்டல்ல.
இறக்கை இல்லாமல்
பறக்க முயல்வது
இயற்கைக்கு முரணானது.
திட்டமிட்டாலும்
இல்லாவிடினும்
தன்பாட்டுக்குப் போகும்
வாழ்க்கை.

கருத்துகள் இல்லை: