புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

                                      சம நீதி
ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?
நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம்
சமமாய் எமக்குள் பிரித்துக் கொள்வோம்.

                        புதிய ஜனநாயகம்
மக்களின் பணத்தை
மக்களில் சிலர்
(தம்)மக்களுக்காக
கொள்ளை அடிப்பது.

                           காலத்தின் கோலம்
 பொங்கும் காலம் போய்
 'போ'ங்காலம் வந்து விட்டால்
 அருகம் புல் நட்டாலும்
 அப்படியே கருகி விடும்.  

 






கருத்துகள் இல்லை: