புதன், 25 ஜனவரி, 2006

அன்றொரு மழைநாளில்....

முந்தின நாள் ராத்திரி
இடி மின்னலுடன்
கனத்த மழை.
அதிகாலையும் நீடித்த
சின்னத் தூறலில்
சணல் சாக்கு
தலைக்குக் குடையாக
காடு காடாய் ஓடி
வரப்புகளில் புடைத்திருந்த
காளான்களை
லகுவாகப் பிடுங்கி
மடியில் சேர்த்து
வீட்டுக்கு வந்தால்
அமர்க்களமான வரவேற்பு.
கறிக் குழம்பு
தோற்கும்படிக்கு
அம்மாவின்
காளான் குழம்பு
ஓ...இன்று
அந்தக் காளான்களையும்
காணோம்....
கன ஜோராய்
குழம்பு வைக்க
அம்மாவும் இல்லை!

கருத்துகள் இல்லை: