வியாழன், 26 ஜனவரி, 2006

முன்னறிவிப்பு

சுங்கத்திலிருந்து
கிழக்காய் நீளும்
சாலையின் முடிவில்
பிருமாண்டமான
பிள்ளையார் சிலை.
சாலையின் ஒரு புறத்தில்
திருமணக் கூடமாய்
மாறியிருந்தது
பேர் பெற்ற
படப் பிடிப்பு நிலையம்.
எதிர் புறத்திலோ
பெரிய பள்ளிக்கூடம்.
சாலை முழுதும்
நாள் முச்சூடும்
வாகனங்களின்
ஓயாத போக்கு வரத்து
இரைச்சலோடு.
காலை,மாலை
இரு வேளையும்
அச்சமற்று சாலை கடக்கும்
பள்ளிக் குழந்தைகள்....
சாலையின்
தொடக்கத்தில்
அமைந்திருந்த
கல்லறைத்தோட்டத்தின்
முன் வாசலில்
"இங்கு...
சவப்பெட்டிகள்
தயார்!"
என்றொரு
அறிவிப்புப் பலகை.....
பயணிப்போரின்
மனங்களை
அச்சுறுத்தியபடி.

கருத்துகள் இல்லை: