ஞாயிறு, 1 ஜனவரி, 2006

நான் நானில்லை

பிறந்த பொழுது
ஒருவனாய் பிறந்தேன்
வாழ்ந்த பொழுது
பலராய் வாழ்ந்தேன்
இவன் இவன் தான் என்று
எவரும் கூற முடியாத படிக்கு.
இறந்த பொழுது
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவனாய் இறந்தேன்.

1 கருத்து:

b சொன்னது…

அருமையான கவிதைகள் நண்பரே.