வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சாயம் செய்த மாயம்

மாட்சிமை இல்லார் எம் மனைவி மக்கள்.
எனக்கு எதிராய் எண்ணுவர் இளையர்.
அல்லவை செய்வான் வேந்தன்; காக்கிலன்.
குறிப்புணர்ந் தியங்கா கோணல் ஏவலர்.
ஆன்றவிந் தடங்கா, கொள்கை பிறழ்ந்த
கீழோர் பலர் யான் வாழும் ஊரே!
இத்துணை இடர்கள் எய்திய போதும்
ஆண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிர் ஆயின்
எல்லாம் அந்த தலைமுடிச் சாயம்
நிகழ்த்திய மாயம் என்ற றிவீரே!

( பிசிராந்தையார் மன்னிப்பாராக! )

கருத்துகள் இல்லை: