குழி வெட்டியவன்
நீளமாய் வெட்டாமல்
ஆழமாய்
வெட்டிவிட்டான் என்று
ஆளாளுக்குப்
பிடித்துக்கொண்டார்கள்.
"நீளம்
இல்லாவிட்டால் என்ன?
ஆழம்
இருக்கிறதல்லவா!
படுக்க வைக்காமல்
உட்கார்த்திவிட்டால் போகிறது.
வெட்டிப் பிணத்துக்காக
வெட்டி விவாதம் எதற்கு?"
குழிக்கு
வெளியே இருந்து
இறந்தவனின் ஆத்மா
கேட்டது.
1 கருத்து:
உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
கருத்துரையிடுக