புதன், 26 ஆகஸ்ட், 2009

ஆத்மாவின் கேள்வி

குழி வெட்டியவன்
நீளமாய் வெட்டாமல்
ஆழமாய்
வெட்டிவிட்டான் என்று
ஆளாளுக்குப்
பிடித்துக்கொண்டார்கள்.
"நீளம்
இல்லாவிட்டால் என்ன?
ஆழம்
இருக்கிறதல்லவா!
படுக்க வைக்காமல்
உட்கார்த்திவிட்டால் போகிறது.
வெட்டிப் பிணத்துக்காக
வெட்டி விவாதம் எதற்கு?"
குழிக்கு
வெளியே இருந்து
இறந்தவனின் ஆத்மா
கேட்டது.

1 கருத்து:

Unknown சொன்னது…

உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்