புதன், 2 செப்டம்பர், 2009

பூக்களைப் பறிக்காதீர்

பூ என்றால்
உங்களில்
பல பேர்க்கு
அழகும்
மணமும் தான்
ஞாபகத்தில்
தெறிக்கும்
தலையில் சூடி
அழகூட்ட
அறிவீர்கள்
பூக்களைக்
காய்ச்சிக்
கஷாயமும்
அத்தரும்
சென்ட்டும்
தயாரிப்பீர்.
உங்களைப்
பொறுத்தமட்டில்
பூ என்பது
உங்களுக்காகவே
படைக்கப்பட்ட
நுகர்பொருள்!
ஆனால்
யாராவது
ஒரு கணமேனும்
இந்தப் பூக்களைப்
பூப்பதற்கு
தாவரம் புரிந்த
தவம் பற்றி
யோசித்ததுண்டா?
தன்னின்
உறுதியான
வேர்களைச் செலுத்தி
நெடும்
பாறைகளையும்
கடும்
மண்ணடுக்குகளையும்
பிளந்து சென்று
தண்ணீர்
கொண்டு வர
தாவரம் செய்த
பகீரதப்
பிரயத்தனம் பற்றி
சிந்தித்ததுண்டா?
மரங்களில்
பூக்களை
ரசிக்கும்
நீங்கள்
பூக்களில் உள்ள
மரங்களை
நினைப்பதுண்டா?

கருத்துகள் இல்லை: