"ஏங்க, உங்களத்தான்,
படியில நிக்காதீங்க
ஏறி, எறங்கறவங்களுக்கு
எடஞ்சல் பண்ணாதீங்க",
நடத்துனர்
நயமாகவும்
நாகரீகமாகவும் வேண்டினார்,
பயனேதும் இல்லாது.
"ஒன்னத் தானப்பா
படிய விட்டு மேலேறு,"
இம்முறை
நடத்துனர் குரலில்
காரமும்
கண்டிப்பும் தெறித்தது.
ஆனாலும்
நம் ஆசாமி
அசைய மறுத்தான்.
"ஏறுடா மேலே
கத்திகிட்டே இருக்கேன்
புடிச்சி வெச்ச
புளி மாதிரி
நிக்கிறியே."
இந்த மொழி
நன்கு புரிந்ததால்
அவசர அவசரமாக
மேலேறினான் ரோசக்காரன் (?)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக