புதன், 9 செப்டம்பர், 2009

பயணம்

அந்த வண்ணத்துப் பூச்சி
நான் பயணித்த
இரவுப் பேருந்தில்
மெல்லிய
இறக்கைகளை
அசைத்தவண்ணம்
பறந்து கொண்டிருந்தது
பறந்து பறந்து
சலித்தது போல்
யாருடைய சட்டையிலோ
அல்லது
சேலையிலோ
ஒட்டிக்கொண்டது
அதை
மறந்திருந்த பொழுது
மீண்டும்
பறக்க ஆரம்பித்தது.
அம்மா மடியில் இருந்த
சின்னக் குழந்தை
கையை நீட்டிப்
பிடிக்க முயன்று
தோற்று
அழுதது.
இடையில் நான்
இறங்கிக் கொண்டாலும்
அந்த வண்ணத்துப் பூச்சி
என்னவாகியிருக்குமோவென
சின்னக்கேள்வி
மனதில்
ஒரு பெரிய
சுமையாய்.........
யாருடைய
பூட்ஸ் காலிலும்
நசுங்காமல்
இருந்தால் போதும்!

கருத்துகள் இல்லை: