வெள்ளி, 4 செப்டம்பர், 2009

புத்தகங்கள்

மனிதர்களை இணைக்கக்கூடிய வலிமையான பாலங்கள் புத்தகங்கள் .
உலகில் நிகழ்ந்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும்
தூண்டுகோல்களாக இருந்தவை புத்தகங்களே.
சமூகத்தை தலைகீழாகப் புரட்டியெடுக்கும் ஆற்றல் வாய்ந்த
நெம்புகோல்கள் புத்தகங்கள்.
புத்தகங்கள் வாழ்க்கையில் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும்
கொண்டுவருகின்றன.
புத்தகங்கள் நம்முடைய நிரந்தர நண்பர்கள்.
படைத்தவர்களையும் படிப்பவர்களையும் ஒருங்கிணைக்கின்றன புத்தகங்கள்.
அருவி நீரைக்கொட்டுவதைப்போல புத்தகங்கள் அறிவைக்கொட்டுகின்றன.
பல புத்தகங்களை வாசிக்கிறோம்; சில புத்தகங்களில் மட்டுமே வசிக்கிறோம்.
புத்தகங்களை நேசிப்பவனால் மட்டுமே மனித குலத்தை
நேசிக்கமுடியும்.
படிப்பது மட்டும் போதாது; படித்தபடி நடப்பது முக்கியம்.
படிப்பதற்குக் கேட்டால் மகிழ்ச்சியோடு புத்தகங்களைக் கொடுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள்.
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்.
வீட்டில் ஒரு நூலக அறை அமையும் பொழுது, வீடு
கூடுதல் அழகு பெறுகிறது.
ஒரு குழந்தையிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்,
மனிதகுலத்தை நேசிக்கும் ஒரு மனிதன் உருவாவது திண்ணம்.
படைப்பாளிகளே! குழந்தைகளுக்காக நிறையப் புத்தகங்களை எழுதுங்கள்.
உங்கள் வருங்காலச் சந்ததிக்கு மண்ணும் பொன்னும் சேர்த்துவிட்டுச் செல்லும் பொழுது,
கொஞ்சம் புத்தகங்களையும் விட்டுச் செல்லலாமே!

கருத்துகள் இல்லை: