மழை இல்லையேல் மன்னுயிர் இல்லை
மழை பொழிந்தால் மண் சிரிக்கும்
மண் சிரித்தால் பொன் விளையும்.
மேகம் அழும் பொழுது மண்ணின்
தாகம் தணிகிறது.
மழையும் மரங்களும் நல்ல நண்பர்கள்.
மழை பொழிய மரங்கள் வளரும்.
மரங்கள் வளர மழை பொழியும்.
தேவர் உலகில் அமிழ்தம் உண்டோ இல்லையோ
தெரியாது.ஆனால், வானத்தில் அமிழ்தம் உள்ளது.
அதன் பெயர் மழை.
குளிர்விக்கும் மழைக்கு கொதிப்பேறி விட்டால்
நாட்கணக்கில் கொட்டோ கொட்டென்று கொட்டும்;
வெள்ளம் பெருக , விரயமாகும் மண்.
மழை சொட்டவும் செய்யும்; கொட்டவும் செய்யும்.
மழைநீரைத் தேக்கி வைக்க குயவன் பானைகள்
செய்துகொண்டிருந்தான். மழை பெய்து மண் பானைகள்
கரைந்து காணாமல் போயின.
பெய்யாமல் கெடுப்பது மட்டுமின்றி பெய்தும் கெடுக்கும்
ஆற்றல் மழைக்கு உண்டு என்பர் தமிழ் ஆன்றோர்.
மழை பொழிந்து மண்ணில் ஈரம் கசிந்தால் தான்
மக்கள் மனம் நிறைந்து மகிழ்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக