வியாழன், 13 செப்டம்பர், 2012

எங்கே வானவில் முடிகிறதோ.....

எங்கே வானவில் முடிகிறதோ அங்கே,
ஒரு இடம் அமையப்போகிறது,சகோதரனே!
அங்கே உலகம் எல்லாவிதப் பாடல்களையும் பாடப்போகிறது.
அங்கே நாம் சேர்ந்து பாடப்போகிறோம்,சகோதரனே!
நானும் நீயுமாகச் சேர்ந்து--
நீ வெள்ளையன் ...நான் அவ்வாறு இல்லாவிடினும் கூட.
அது ஒரு சோகமான பாடலாக இருக்கும்,என் சகோதரனே!
ஏனெனில் அதன் மெட்டு நாம் அறியோம்.
கற்பதற்கு கடினமான மெட்டு அது.
ஆனாலும் என் சகோதரனே,
நீயும் நானுமாகச் சேர்ந்து
நாம் கற்றுக் கொள்ளமுடியும் அதனை.
கருப்பு மெட்டு என்று ஒன்று எங்கும் இல்லை.
வெள்ளை மெட்டு என்பதும் இல்லவே இல்லை.
இசை மட்டுமே இருக்கிறது,சகோதரனே.இசை மட்டுமே.
ஆம்,நாம் இசையை மட்டுமே பாடப் போகிறோம்-
வானவில் எங்கு முடிகிறதோ,அங்கே.
                                              ---ரிச்சார்டு ரைவ்(தென்னாப்பிரிக்கக் கவிஞர்)

கருத்துகள் இல்லை: