வியாழன், 27 செப்டம்பர், 2012

அது வரைக்கும்

தேளாய்க் கொட்டுகிறது வறுமை.
தீயாய் எரிக்கிறது பசி.
சாண் ஏற முழம் சறுக்கும் வாழ்க்கை.
'விழுவது எழுவதற்கே'
கேட்பதற்கு
கவர்ச்சியாகவே இருக்கிறது
உபதேசம்.
எழும் வரைக்கும்
உயிர்த்திருக்க என்ன வழி?

கருத்துகள் இல்லை: