வியாழன், 27 செப்டம்பர், 2012

கனவுகள்

அழுகின்ற குழந்தைக்கு
ஆழாக்குப் பால் வாங்கணும்...
ஒழுகும் குடிசைக்கு
ஓலை வாங்கி மேயணும் ....
மெழுகுவர்த்தியில் படிக்கும்
சின்னப் பையனுக்கு
மின்விளக்கு பொருத்தணும்...
அழகான மனைவிக்கு
வரும் பொங்கலுக்காவது
கம்மல் வாங்கித் தரணும்...
இருக்கின்ற மவராசனுக்கு
இவை எல்லாம்
கடுகுச்சோடு விசயங்க தான்.
இல்லாத சம்சாரிக்கோ
மொடாச்சோடு கனவுகள்.

கருத்துகள் இல்லை: