ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வாழ்க்கையின் ரகசியம்

கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் அழுகை
அது தான் வாழ்க்கையடா!
இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள்
அதன் பேர் இயற்கையடா!
இனிப்பே தின்றால்
திகட்டிப் போகும்
கசப்பும் வேண்டுமடா!
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
பெரியோர் மொழிந்ததடா!
வாழும் வரைக்கும்
மனிதரை நேசி
வாழ்க்கை இனிக்குமடா!
இருப்பதைப் பலர்க்கும்
பகிர்ந்து கொடுத்தால்
இன்பம் கிடைக்குமடா!



கருத்துகள் இல்லை: