ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பாடம்

பகையும் உறவும் பருவங்கள் போல
தேயும்;வளரும் வானத்து நிலவாய்.
கசப்பு என்பது இனிப்பின் மரணம்.
வெறுப்பின் முடிவில் அன்பின் உதயம்.
பொறுமையின் உச்சம் பூமியின் நடுக்கம்.
காற்றின் சினத்தில் கடும்புயல் சீறும்.
கடலின் கொதிப்பில் வெள்ளம் பாயும்.
கதிரவன் சீறின் குளிர்நீர் கொதிக்கும்.
ஏழைகள் எழுந்தால் புரட்சிகள் வெடிக்கும்;
ஆளும் வர்க்கம் அடியோடு  ஒழியும்.
சரித்திரம் சொல்லும் பாடம் இது தான்.
தெரிந்து நடந்தால் வாழ்க்கை பிழைக்கும்.

கருத்துகள் இல்லை: