புதன், 6 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -1

  1. இதயங்கள் இணையும் பொழுது உறவுக்குப் பதியம் போடப்படுகிறது.
  2. மதியை இழக்கும் பொழுது விதி மீது நம்பிக்கை ஏற்படுகிறது.
  3. அறிவின் தொடர்ச்சி ஆக்கம். படிப்பின் தொடர்ச்சி படைப்பு.
  4. கத்தி எடுப்பது மட்டுமா வன்முறை? கடுஞ் சொல்லும் ஒருவகை வன்முறையே.
  5. வளர்பிறையும் தேய்பிறையும் வெறும் காட்சிப் பிழைகளே.
  6. நல்லது யார்க்கும் பணிவு. என்றும் வேண்டும் துணிவு.
  7. செல்வத்தில் சிறந்தது அறிவு. அறிந்ததில் வேண்டும் தெளிவு.
  8. கல்லாகிப் போன மண்ணில் காய்க்காது செடி கொடிகள்.
  9. இருளாகிப் போன மனதில் முளைவிடாது கற்பனைகள்.
  10. எண்ணங்கள் நல்லதானால் ஏற்றங்கள் ஓடி வரும்.

கருத்துகள் இல்லை: