ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மூன்று குறுங் கவிதைகள்

                            ஆசை
ஆசைப் படாத
மனம் வேண்டும்
என்பதே
என்னாசை
                              பற்று
பற்றறுக்க வேண்டும்
எனும் நினைப்பைப்
பற்றிக் கொண்டிருக்கிறேன்
கெட்டியாக.
                               எழுத்து
எழுத முடியவில்லை
எனும் என் இயலாமை பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
தற்சமயம்.

                             .




கருத்துகள் இல்லை: