வியாழன், 28 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 12


  1. கற்றும் நேர்பட வாழாதவன் இவ்வுலகில் இருந்து என்ன பயன்? கற்றவன் நல்லவனாய் இருக்கும் பொழுது மட்டுமே இவ்வுலகம் நல்லதாய் அமையும்.
  2. வசதி உள்ளவர்கள் வறுமையில் வாடுவோருக்கு உதவ வேண்டும். அதற்காகத் தான் அவர்களுக்கு வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
  3. எந்த நாட்டில் விவசாயி துன்பப்படுகிறானோ, அந்த நாடு விரைவில் பசியில் துடிக்கும்.
  4. நம்மில் பலருக்கு வாழ்த்த மனம் வருவதில்லை.வசை பாட மட்டுமே கற்றிருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்முடைய தவறுகள் நமக்கே புரியும். நம்மைச் சற்றே மாற்றிக் கொண்டால் வாழ்க்கை எவ்வளவு இனியதாய் மாறும்!
  5. எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் தவறு செய்யக்கூடும். அது மனித இயல்பு. சிலர் திருத்திக் கொள்கிறார்கள்; பலர் திருந்துவதில்லை.
  6. நம்மையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துவதிலேயே நமது காலத்தில் பாதி பயனில்லாமல் கழிகிறது.
  7. காந்தியின் எளிமை குறித்துப் பெருமைப் படுகிறோம். வாய் கிழிய மேடையில் முழங்குகிறோம். ஆனால், காந்தி போல எளிமையாக வாழ்வதற்கோ, உண்மை பேசுவதற்கோ நாம் முயற்சி செய்வதில்லை.
  8. சொல் ஒன்றாய், செயல் வேறொன்றாய் போலியாய் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம், நாமாக என்று வாழப் போகிறோம்?
  9. இன்சொல், பேசுபவருக்கும், கேட்பவருக்கும் மகிழ்ச்சி தரும். இதயங்களை நெகிழ வைக்கும். நல்லுறவைச் சாத்தியமாக்கும்.
  10. எந்தப் பொருளைப் பயன்படுத்தும் பொழுதும் சிக்கனம் வேண்டும். நீரோ, மின்சாரமோ, சமையல் எரி வாயுவோ எதுவாக இருந்தாலும் சரியே. அப்பொழுது தான் எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாய்க் கிடைக்கும். 




கருத்துகள் இல்லை: