வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-3


  1. கொடுப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது; ஈரமான மனமும் வேண்டும்.
  2. உறவுகள் வலுப்பட கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உண்மையான நேசம் வேண்டும். மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். ஒப்பீட்டைத் தவிர்க்க வேண்டும். சாதி,மதம்,பொருளாதார ஏற்றத் தாழ்வு இவை தாண்டி அன்பை மட்டுமே அளவீடாகக் கொள்ள வேண்டும்.
  3. சின்னச் சின்ன சில்லரைக் காரணங்களுக்காகப் பிரிதல் என்பது பக்குவமற்ற மனத்தையே காட்டும்.
  4. பொது நலச் சேவை  செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அருகி விட்டனர். ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  5. பை நிறைய ஊதியம் வாங்கியும் மனம் நிறையாததால் கையூட்டு வாங்குகிறார்கள்.
  6. வாழ்க்கை சிலருக்கு வசந்த மாளிகை. பெரும்பாலோருக்கு போர்க்களம். சிலர் மாளிகையில். பலர் குடிசைகளில். இன்னும் சிலரோ நடைபாதைகளில். இந்த ஏற்றத் தாழ்வு இருக்கும் வரை 'ஒன்று பட்ட தேசம்' என்பது வெற்றுக் கனவே.
  7. எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று சட்டம் சொல்வதைக் காட்டிலும் வேடிக்கை வேறொன்று இருக்க முடியாது.
  8. தோற்ற பிறகும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதிலிருந்து பாடம் படிக்காதவன் என்றுமே வெற்றி பெற முடியாது.
  9. எப்படி வெற்றி நிரந்தரம் இல்லையோ, அது போல தோல்வியும் நிரந்தரமல்ல. மீண்டும் வெல்லலாம்.
  10. பதவிக்கு வருவது என்பது பொது மக்களுக்கு உழைப்பதற்கே;தம் மக்களுக்கு அல்ல.

கருத்துகள் இல்லை: