திங்கள், 25 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 9

  1. சேராத இடம் சேர்ந்தவர்கள் எவரும் வாழ்க்கையில்  கரை சேர்ந்ததாக வரலாற்றில் பதிவு இல்லை.
  2. நல்லோர் சொல் கேள். அவர் பக்கம் நில். அவர்கள் வகுத்த பாதையில் செல். வாழ்க்கையில் வெல்.
  3. சொல் ஒன்று; செயல் வேறு என்ற ரீதியில் வாழ்வோர் எவரும் வாழ்வில் உயர்ந்ததாக வரலாறு இல்லை.
  4. முதுமையைப் பார்த்து இளமை பரிகசிக்கும். முதுமையோ இளமையைப் பார்த்துப் பரிதாபப்படும்.
  5. இளமை கூறியது, "நான் எவ்வளவு அழகாகவும், பலசாலியாகவும் உள்ளேன் பார்த்தாயா? " முதுமை அடக்கத்தோடு சொன்னது, "நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்." புரிந்துகொண்ட இளமை தலை குனிந்தது. 
  6. பேரண்டப் பெரு வெளியில் நாம் ஒன்றுமே இல்லை என்பது அறிந்தும் நம்மால் தற்பெருமை, மமதை, அகங்காரம், வீண் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியவில்லையே!
  7. ஓராண்டு வாழ்ந்தாலும், நூறாண்டு வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதே பிறவி எடுத்ததன் பயனாகும்.
  8. ஒரு வயதான மூதாட்டிக்கு சாலையைக் கடக்க ஒருவன் உதவினால், அவன் அந்த நாளை பயனுள்ள நாளாக வாழ்ந்தவனாகிறான்.
  9. வெளிச்சம் வர இருள் விலகும். கதிரொளி பட்டதும் காலைப் பனி காணாமல் போகும். அது போல் தான் துயரங்களும். காலம் தரும் ஒத்தடத்தில் கரைந்து போகும். 
  10. நல்லவர்களைப் பாராட்டுங்கள். இன்னும் நல்லது செய்வார்கள்.



   

கருத்துகள் இல்லை: