செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 10

  1. ஒரு இலக்கை அடைய பல பாதைகள் இருந்தாலும் அதில் நேர் பாதையைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.
  2. இன்று மழை வரவில்லை என்பது உழவனுக்கு ஏமாற்றம் தான். அதற்காக அவன் ஒரே அடியாக மனம் உடைய வேண்டியதில்லை. அவன் செய்ய வேண்டியதெல்லாம் நாளை மழை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பது தான்.
  3. நாம் பிறரிடம் குற்றம் காண்பதிலேயே நிறைய நேரம் செலவழிக்கிறோம். நமக்குள் உள்ள குறைகளைக் கண்டு கொள்வதுமில்லை. ஒப்புக் கொள்வதுமில்லை. திருத்த முயல்வதுமில்லை.
  4. குழு மனப்பான்மை என்பது  மனிதர்களுக்கு இடையே முகிழ்க்கும் நல்ல உறவுகளை முறித்துவிடும். மனித நேயத்தை குலைத்து  விடும்.
  5. எந்த ஒரு பகுதியிலும் ஒரு சிலரே பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் அச்சத்தால் அவர்களை விட்டு விலகி ஓடுகிறார்கள். அந்த ஒரு சிலர் வைத்ததே சட்டமாகி விடுகிறது.
  6. தேர்வில் தோற்றுப் போனால் தற்கொலை ஒன்று தான் தீர்வா? தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெல்வதில்லையா? உலக வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தோமானால் பல சாதனையாளர்கள் தேர்வுகளில் தோல்வியுற்ற செய்திகளைக் கண்ணுறலாம்.
  7. யாரும் உங்களை விட்டு விலக காரணமாக இருக்காதீர்கள். அனைவரையும் அன்போடு அரவணைத்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.
  8. ஒருவன் உயர, உயரப் பணிவு வர வேண்டும். அது தான் அறிவின் ஆரம்பம்.
  9. ஒருவன் எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், உயர் பதவி வகித்தாலும், அடக்கம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் செய்தால், அவனை அறிவுடையோர் மதிக்க மாட்டார்கள்.
  10. நல்ல பேச்சுக்கு ஆர்ப்பாட்டம் அவசியமில்லை.அடக்கமே அதன் அணிகலன். 


கருத்துகள் இல்லை: