புதன், 13 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-5


  1. நேசிக்கும் தொழிலை தேர்ந்து எடு அல்லது தேர்ந்து எடுத்த தொழிலை நேசி.
  2. உன் தாத்தா தன் தொழிலில் கோடி,கோடியாக பணம் ஈட்டியிருக்கலாம். உன் அப்பா எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி இருக்கலாம். இரண்டிலிருந்தும் பாடம் படி. நீ முன்னேற பாதைகள் புலப்படும்.
  3. எப்பொழுதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இரு. அது உன் ஆயுளைக் கூட்டும்; நல்ல நண்பர்களை உருவாக்கும்.
  4. நாளை நமக்கு வெற்றி மாலைகளைச் சூட்டக் காத்திருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இன்று அதற்கு நம்மை தகுதியாக்கிக் கொள்வது மட்டுமே.
  5. அளவுக்கு மீறிய அறிவுரைகளும் உபதேசங்களும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
  6. உண்மையான நட்பு நீ துயரப்படும் பொழுது கண்ணீர் துடைக்கும். நீ சந்தோசிக்கும் பொழுது, பரவசப்படும்.
  7. படித்தவன் சூதும் வாதும் செய்தால் 'ஐயோ'வென்று போவான்' என்று சபிக்கிறார் பாரதி. ஆனால், அவன் ஐயோ என்றும் போகவில்லை; அம்மா என்றும் சாகவில்லை.மாறாக, ராஜ போகத்தில் வாழ்கிறான்.
  8. தலைக்கனம் ஆபத்தானது. அது ஒருவனை அதல, பாதாளத்திற்குள் அமிழ்த்து விடும்.
  9. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உள்ளனர், படித்தவர்களில் முட்டாள்கள் இருப்பதைப் போல.
  10. சுற்றுப்புறத்திலிருந்து ஒரு சிறிய குப்பையை நீக்குபவன் கூட தூய்மையான உலகை நிர்மாணிப்பதில் பங்கு கொள்கிறான்.


கருத்துகள் இல்லை: