சனி, 2 பிப்ரவரி, 2013

எழுதுதல்

எழுத வேண்டுமெனப்
பீறிடும் ஆசை
வெகு நாளாய்.
எதை எழுதுவதென
தீர்மானிக்க இயலவில்லை.
எதைப் பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம் என்கின்றனர்
ஏற்கெனவே எழுதியவர்கள்.
என்றாலும்
அச்சமாய் இருக்கிறது,
யாரேனும் எழுதியதை
எழுதி விடுவேனோவென்று.

கருத்துகள் இல்லை: