வியாழன், 7 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -2


  1. பாடுபட்டால் மட்டும் போதாது; படும் பாட்டில் ஈடுபாடு வேண்டும். அப்பொழுது தான் அதில் பலனிருக்கும்.
  2. நேற்றைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாது இருந்திருக்கலாம். அதையே நினைத்துப் புலம்பி இன்றைய வாழ்க்கையை துயரமாக்கிக் கொள்வது முட்டாள்தனம்.
  3. நேற்று விதைத்தது இன்று முளைக்காதது பற்றிக் கவலைப்படாதே. நாளை முளைக்கலாம். நாளை மறுநாள் முளைக்கலாம். அப்படியும் முளைக்காவிட்டால் மீண்டும் விதை. மீண்டும் மீண்டும் விதை. நம்பிக்கையும் தொடர் முயற்சியும் தான் வாழ்க்கை.
  4. பல முறை அடித்தும் அம்மி நகரவில்லையா? அடி போதவில்லை. மீண்டும் அடி.தொடர்ந்து அடி. ஏதோ ஒரு அடியில் அம்மி கண்டிப்பாய் நகரும்.
  5. இரவாமல் இருப்பது நன்று.இரந்தும் ஈயாமல் இருப்பது கொடுமை.
  6. தேவைகளைக் குறைத்துக் கொள். சேமிப்பதை தேவை உள்ளவனுக்குக் கொடு.
  7. உன் வழித்தோன்றல்களுக்கு நீ விட்டுச் செல்ல வேண்டியது பணமல்ல-ஒரு நல்ல பாரம்பரியம்.
  8. இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தானே தனக்கான புதைகுழியைத் தோண்டிக் கொள்கிறான்.
  9. ஒரு பக்கம் கடவுள் சிலைக்கு பாலாபிசேகம். மறுபக்கம் பாலுக்கு அழும் பாலகர்கள். இதன் பேர் தான் சமூக அநீதி.
  10. யாரையும் புண்படுத்தாமல் இருப்பதே உயர்ந்த பண்பாடு.

கருத்துகள் இல்லை: